ஞாயிறு, 23 அக்டோபர், 2011

காலத்துயர்



தனிமையில் அழுது கழிகின்ற
பொழுதுகளினூடு
முறையிடும் என்னிரவுகள்,
சில விடயங்களின்
நிகழ்வுகளை
காலத்தின் முட்களைப்
பின்னகர்த்தி
முழுவதுமாய் அழித்துவிட
விண்ணப்பிக்கின்றன,
சாறு பிழியப்பட்ட
கழிவெனக் கருகிய
மனதில்
இன்னும் இன்னும்
ரணமாகிக் குருதி
கொட்டும்,
கந்தலாய்க்
கிழித்து வீசப்பட்ட
உடல் மட்டும்
உஷ்ணத்தைத் தணிக்கும்
துணித் துண்டாய்
தேவையின் நிமித்தங்களில்
தலை நிமிர்ந்து கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக