ஞாயிறு, 23 அக்டோபர், 2011

ஏக்கம்




பச்சை வயல் நடுவே
பரணமைத்துப் பாய் போட்டு
முற்றாத நிலக்கடலை
முளையோடு அவித்தெடுத்து
உறவுக் கிளைகளுக்கு
உரித்தெடுத்து ஊட்டிவிட்டு
உல்லாசக் கதை பேச,
வயல்   காட்டுப்
பூந்தென்றல் - என்னை
வந்தழைத்துச் செல்லாதோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக