ஞாயிறு, 23 அக்டோபர், 2011

எதிர்பார்ப்புக்கள்




தனியாக நடப்பட்ட
இந்த மரத்திற்கு
ஆதியும் இல்லை
நாதியும் இல்லை,

தானாகவே நிலம் பிளந்து
தன்னை நிறுத்திக் கொண்டது,
காலால் ஊற்றெடுத்து
தலையால் உணவெடுத்து
தளைத்த பொழுதுகளில்

இளமையின் உல்லாசத்தில்
பூத்துக் குலுங்கிய பொழுதுகளில்

உல்லாசத்தின் உச்சத்தில்
கருவாகிக் 
காயாகிய பொழுதுகளில்

 எனது உடல்
சடைத்து
நிழல் தந்த பொழுதுகளில்

எல்லாம் இருந்தன
எல்லோரும் இருந்தனர்,

இன்னும் மாய்கின்றேன்,
அவை  எப்படி
இப்படி 
மறைந்து போயின....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக