ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தண்ணிச் சோறும் சாம்ப வாழக் கருவாடும்..

கொலனி வயல் உழுது
குறுணல் சோறாக்கி
குறுக்கு வாய்க்கால் வடிச்சு
குறட்டை மீன் குழம்பு வச்சு
பொட்டியான், பனையான்
உளுவ, விராலோட
இறாலும் பொரிச்சிவச்சு
பாலாணம் மணக்கின்ற
பரண் சோறு திண்டவன்தான்,
 
காலம் தெசை மாறி
கைல குழல் தந்ததால
சொல்லுக் கேளாத
சொந்தமெல்லாம் வந்திடிச்சி,

காசிக்கும் பஞ்சமில்ல - யாரும்
கௌரவத்தில் விஞ்சவில்ல 
சொந்தங்க  கூடி நின்னு
சொர்க்கத்தப்  பறிச்ச கதை
சொல்லாமப் போனேனண்டால்
செல்லரிச்சிப் போகாதா
செத்த இந்தப் பாவி நெஞ்சு,

கனடாவும் கேட்டதில்ல -ஏன்
தல நகரே கேட்டதில்ல
தவிச்ச எங்க ஊர் வாய்க்குத்
தண்ணியாத்தான் நாங்கரூந்தோம்,
பொடரியில புடிச்சிழுத்து
புழுதியில பொரட்டி வாட்டி
ஊர உட்டுத் துரத்தி உட்டா
ஒதுங்க இடம் தேட வேணாம்?

கைல குழல் எடுத்துக்
கெடச்ச சொகம் பாதிஎண்டா
சாம்ப வாழக் கருவாட்டுத்
தண்ணிச் சோறு மீதிஎண்டு
அலியார்- கதீசம்மா
பேரனுக்குத் தெரியாதா?

நெனச்ச மனை போச்சி,
நேசிச்ச மனசெல்லாம்
நெருப்பள்ளிக் கொட்டியாச்சி,
கெடச்ச  மனையோடக்
கெடந்து   செத்தாப்
பிழையாமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக